விஷ்ணுபதி புண்ணிய காலம் வழிபாட்டின் மகிமைகள்

விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆண்டில் நான்கு நாட்கள் மட்டுமே வரும் பெருமாளுக்கு உரிய மிக சிறப்பான நாள்.விஷ்ணுபதி

விஷ்ணுபதி புண்ணிய நேரம்:

விடியற்காலை 1:30 மணி முதல் காலை 10:30 மணி வரை வரும் 9 மணி நேரமும் விஷ்ணுபதி புண்ணிய நேரம், இவற்றை விஷ்ணு பூஜை செய்ய உகந்த நேரம் என்பர்.

இந்த நேரத்தில் செய்யும் வழிபாடு மன அமைதியையும் செல்வ வளத்தையும் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் தரும் என்பது ஐதீகம்.

பார்த்ததும் வெற்றி கிட்டும் நவகுஞ்சரம்

விஷ்ணுபதி புண்ணிய காலம்:

விஷ்ணுபதி புண்ணியகாலம் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, வருடத்தில் நான்கு முறை மட்டுமே வரும் புண்ணியகாலம்.

லட்சுமி நரசிம்மராக மகாவிஷ்ணு மாறிய காலம் விஷ்ணுபதி புண்ணிய காலம் இது ஏகாதசி விரதத்தை விட பல மடங்கு உயர்வானது.

  • வைகாசி 1
  • ஆவணி 1
  • கார்த்திகை 1
  • மாசி 1

சிவன் கோயில்களில் பிரதோஷ கால பூஜை நடத்தப்படுவது போல் பெருமாள் கோயில்களிலும் இந்த விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு பூஜை செய்யப்படும்.

வழிபடும் முறை மற்றும் பலன்கள்:

  • அதிகாலை 4:30 AM முதல் 10:30 AM வரை பெருமாள் கோவிலுக்கு சென்று கொடிமரத்தை 27 முறை சுற்றி பிரார்த்தனை செய்தால் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் அடுத்த மூன்று விஷ்ணுபதி காலம் முடிவதற்குள் நிறைவேறும்.
  • ஜாதகத்தில் உள்ள குறைபாடுகள் நீங்க இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் விஷ்ணுபதி நேரத்தில் மிக தொன்மையான பெருமாள் கோவிலுக்கு சென்று ஜாதகத்தை வைத்து வழிபட கிரக தோஷங்கள் நீங்கும்.
  • விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் விஷ்ணு பகவானை வழிபடுவதற்கான மந்திரம் “ஓம் ஸ்ரீ ஹரி விஷ்ணு ஹரி ஓம்” இது விஷ்ணுவின் அருளைப் பெறவும், பாவங்களைப் போக்கவும், வாழ்வில் வளம் பெறவும் சொல்லப்படும் மந்திரம்.
  • இந்த வழிபாட்டினால், கடன் தொல்லை தீரும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் திருமணம் கைகூடும் தொழிலில் முன்னேற்றம் மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
இந்த வழிபாட்டினால்,
  • கடன் தொல்லை தீரும்
  • குழந்தை பாக்கியம் கிடைக்கும்
  • திருமணம் கைகூடும்தொழிலில்
  • தொழிலில் முன்னேற்றம் அடையும்
  • உடல் ஆரோக்கியம் மேம்படும்
  • வாழ்வில் செல்வ நிலை உயரும்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *