விநாயகரின் 16 முக்கிய மந்திரங்கள் மற்றும் அர்த்தம்

விநாயகரின் ஷோடச நாமாவளி எனப்படும் 16 திருநாமங்கள் சகல காரியங்களும் சித்தியாகவும், ஆயுள் ஆரோக்கியத்துடன் சகல சம்பத்துகளும் பெறவும், பல்வேறு துன்பங்களை நீக்கி தடைகளற்ற வாழ்வு வாழவும் உதவும்.

விநாயகரின் 16 திருநாமங்கள்:

  • ஓம் சுமுகாய நம – மங்கல முகம் உடையவன்
  • ஓம் ஏக தந்தாய நம – ஒற்றை தந்தம் உடையவன்
  • ஓம் கபிலாய நம – பழுப்பு நிறம் உடையவன்
  • ஓம் கஜகர்ணிகாய நம – யானையின் காதுகளை உடையவன்
  • ஓம் லம்போதராய நம – பெரிய வயிறுடையவன்
  • ஓம் விகடாய நம – அழகிய வடிவம் உடையவன்
  • ஓம் விக்னராஜாய நம – தடைகளை நீக்குபவன்
  • ஓம் விநாயகாய நம – தனக்கு மேல் நாயகன் இல்லாதவன்
  • ஓம் தூமகேதுவே நம – புகை வண்ண மேனியன்
  • ஓம் கணாத்யக்ஷாய நம – கணங்களின் தலைவன்
  • ஓம் பாலசந்த்ராய நம – குழந்தை சந்திரன் போல் ஒளிர்பவன்
  • ஓம் கஜாநநாய நம – யானை முகம் உடையவன்
  • ஓம் வக்ரதுண்டாய நம – வளைந்த தும்பிக்கை உடையவன்
  • ஓம் சூர்ப்பகர்ணாய நம – முறம் போன்ற காதுகள் உடையவன்
  • ஓம் ஹேரம்பாய நம – ஐந்து முகம் கொண்டவன்
  • ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம – கந்தனுக்கு முன் பிறந்தவன்

விநாயகருடைய மந்திரங்களில் சக்தி வாய்ந்த இந்த 16 மந்திரங்களை தினமும் உச்சரிக்க வேண்டிய வேண்டுதல்கள் அப்படியே பலிக்கும் 16 வகை செல்வங்களையும் பெறலாம்.

வழிபடும் முறை:

  • விநாயகருடைய மூலமந்திரத்தை உச்சரித்து ஒரு முறை வலம் வந்து சிதறு தேங்காயை உடைத்து வழிபட்டால் காரியத் தடை விலகும் என்பது ஐதீகம்.
  • சிதறு தேங்காய் உடைந்து சிதறுவது போல காரிய தடைகள் அனைத்தும் சிதறி வெற்றி கிட்டும்.
  • விநாயகர் மூல மந்திரம் “ஓம் கம் கணபதயே நமஹ” என்ற மந்திரத்தை 27 அல்லது 108 முறை ஜெபிக்க வேண்டும்.
  • வீட்டில் வழிபாடு செய்பவர்கள் விநாயகருக்கு பிடித்த ஏதேனும் ஒரு நெய்வேத்தியம் வைத்து இந்த 16 மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்யவும்.
  • இந்த பதினாறு மந்திரங்களை நினைவில் ஏற்றி தினமும் உச்சரித்து வாருங்கள் சகலமும் வசமாகும்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *