சந்தனம் அணிவதன் நன்மைகள்

சந்தனத்தில் இயற்கையாகவே குளிர்ச்சியை கொடுக்கக்கூடிய தன்மை உண்டு.உடலுக்கும்

உடலுக்கும், மனதிற்கும் ஒரு சேர நன்மையை வழங்கும் ஒரு அற்புத அம்சம் சந்தனம்.

ஆக்ஞா சக்கரம் (நெற்றி பொட்டு):

  • இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடம் நெற்றி பொட்டு எனப்படும்.
  • மூளைக்கு போகும் அனைத்து நரம்புகளும் சேரும் இடம் நெற்றி போட்டு.
  • நெற்றி பொட்டு பகுதியை ஆக்ஞா சக்கரம், மூன்றாவது கண் மற்றும் ஞானக்கண் என்பர்.
  • ஆழ்மனதினை கட்டுப்படுத்தும் மையப்புள்ளி இரு புருவம் நடுவே உள்ளது.

தினமும் சந்தனம் அணிவதால் ஏற்படும் நன்மைகள்:

  • சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது.
  • மன அழுத்தம் குறைந்து புத்துணர்ச்சி கிடைக்கும்.
  • பதட்டத்தை போக்கி மன அமைதியை தரும்.
  • நம்முடைய விழிப்பு நிலையை தூண்டும்.
  • தீய சக்திகள் நமக்குள் பரவாமல் தடுக்கும்.
  • மூளையின் பின்பகுதியில் இருக்கும் ஞாபகங்களை தூண்டும்.
  • கவனத்தை மேம்படுத்தும் நரம்பு மண்டலம் சீராக்கும்.
  • நினைவாற்றலும் சிந்திக்கும் திறனும் அதிகரிக்கும்.
  • அடிக்கடி மறந்து போவது குறைந்து ஞாபக சக்தி மெல்ல மெல்ல அதிகரிக்கும்.
  • குழந்தைகள் தினமும் சந்தனம் வைப்பதால் படிப்பாற்றல் மேம்படும்.

சந்தனம் வைக்கும் முறை:

  • சந்தனத்தை மோதிர விரலால் எடுத்து உள்ளங்கையில் சிறிது வைத்து லட்சுமி தேவியை வேண்டி பிறகு நெற்றியில் வைக்க வேண்டும்.
  • கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்தவாறு நின்று வைப்பது சிறப்பு

மந்திரம்:

  • “ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ”இந்த மந்திரத்தை நாம் சந்தனம் வைக்கும் போது ஒரு முறை சொல்லி வைக்க விஷ்ணு பகவானின் அருள் கிடைக்கும்.

மந்திரத்தின் அர்த்தம்:

நான் வாசுதேவனுக்கு (விஷ்ணு) வணக்கம் செலுத்துகிறேன் என்று பொருள்.

  • திருநீறு – சிவன்
  • சந்தனம் – விஷ்ணு
  • குங்குமம் – சக்தி

குரு பகவானின் முழு பலனும் தினமும் சந்தனம் அணிவதால் கிடைக்கும்.

6 மாதத்திற்கு குறைந்த குழந்தைகள், குளிர் காலங்களில் வயதானவர்கள் மற்றும் வலிப்பு, ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் அதிக அளவில் பயன்படுத்தக் கூடாது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *