அரசு வேலை கிடைக்க விநாயகர் வழிபாடு

முழுமுதற்கடவுளான விநாயகரை முழு மனதுடன் உண்மையான பக்தியுடன் வழிபட வேண்டியது கிடைக்கும்.

தினமும் அரச மர விநாயகருக்கு தண்ணீர் ஊற்றி 11 முறை வலம் வந்து சிறிது அருகம்புல் வைத்து வழிபடவும்.

இது அரசு வேலை , பதவி உயர்வு, வேலையில் பிரச்சனை மற்றும் மனதிற்கு பிடித்த வேலை கிடைப்பதில் உள்ள தடைகள் தாமதங்களை நீக்கும்.

இந்த வழிபாட்டைத் தொடர்ந்து 12 வாரம் செய்வது நல்ல பலனளிக்கும்.

அஸ்வினி நட்சத்திர வழிபாடு:

  • அரசு வேலை, விரும்பிய வேலை கிடைக்க சூரியன் ஒருவரது சுய ஜாதகத்தில் நல்ல இடத்தில் அமர்ந்திருக்க வேண்டும்.
  • தினமும் காலையில் குளித்து முடித்து சூரிய உதயத்திற்கு பின் சூரியன் முன் நின்று “ஓம் ஹ்ரீம் சூர்யாய நமஹ” இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.
  • ஞாயிறு அன்று வரும் அஸ்வினி நட்சத்திரத்தில் சிவன் கோயிலில் உள்ள விநாயகர் வழிபாடு செய்தால் அரசு வேலை மற்றும் உயர் பதவி கிடைக்கும்.
  • சிவன் – சூரியன் (மூளை)விநாயகர் – கேது.
  • அஸ்வினி நட்சத்திரம் அன்று வரும் ராகு கால நேரத்திலும் சிவன் கோவிலில் உள்ள விநாயகரை வழிபடலாம்.

வழிபடும் முறை:

  • ஒரு முறை வலம் வந்து 9 தோப்புக்கரணம் 9 சிதறு தேங்காய் உடைத்து வழிபடலாம்.
  • 9 செவ்வாழை பழங்கள் கொண்ட மாலை சாற்றி வழிபடலாம்.
  • கோதுமை மாவு தீபம் ஏற்றி வழிபடலாம் (நல்லெண்ணெய் அல்லது நெய்).

விநாயகர் மந்திரம்:

“ஓம் கிலி அங் உங் நம” என்பதை 27 முறை சொல்லவும்.

  • கேது என்ற அஸ்வினி நட்சத்திரத்தில் தான் சூரியன் உச்சம் பெறுகிறார் ஆக இந்த வழிபாட்டை செய்வதால் அரசு வேலை நிச்சயம் கிடைக்கும்.
  • அஸ்வினி நட்சத்திரத்தில் சிவன் கோயிலில் உள்ள விநாயகரை வழிபடுவதால் ஒருவரின் மூளை திறன் அதிகமாக செயல்படும் நினைவாற்றலை பெருக்கும், அரசு வேலைக்காக படிப்பவர்கள் இந்த வழிபாட்டால் மிகுந்த பலன் பெறுவர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *