வீட்டிற்குள் எந்தெந்த உயிரினங்கள் வந்தால் அதிர்ஷ்டம் என்பது பற்றியும் எந்தெந்த உயிரினங்கள் வந்தால் துரதிஷ்டம் என்பது பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.
வீட்டிற்குள் இந்த உயிரினங்கள் வந்தால் அதிர்ஷ்டம் :
- சிட்டுக்குருவி : சுப காரியம் நடக்கும்
- வெட்டுக்கிளி : பணம் சேரும்
- நாய் : கண் திருஷ்டி விலகும்
- அரணை : வாரா கடன் வசூல் ஆகும்
- பல்லி : குலதெய்வ அருள் உண்டு
- செங்குளவி : மகிழ்ச்சி உண்டாகும்
- அணில் : சிக்கல்கள் தீரும்
- புறா : பணத்திற்கு பஞ்சமில்லை
- தட்டான் : நல்ல சக்திகள் உள்ளன
- கிளி : எதிர்பாராத நல்லது நடக்கும்
- பொன்வண்டு : காரிய வெற்றி
- சேவல் : வியாபாரத்தில் முன்னேற்றம்
- பட்டாம்பூச்சி : முன்னோர்கள் வருகிறார்கள்
- ஆந்தை : லட்சுமி தேவியின் அருள் உண்டு
- செங்குளவி கூடு கட்டினால் : குழந்தை பாக்கியம் உண்டாகும்
- பசுமாடு வீட்டிற்கு வந்தால் : தெய்வீக அருள் உள்ளது
- காகம் வீட்டிற்கு வந்தால் : முன்னோர்கள் ஆசி உண்டு
- பறவை இனம் கூடு கட்டினால் : மன அமைதி நிலவும்
- மயில் கழுகு வீட்டிற்கு வருவது மிக மிக அரிது வந்தால் மிகவும் அதிர்ஷ்டத்தை தரும்
வளர்ப்பு பிராணிகளுக்கு இவை பொருந்தாது
வீட்டிற்குள் இந்த உயிரினங்கள் வந்தால் துரதிஷ்டம் :
- பாம்பு : வருமானம் பாதிக்கும்
- வௌவால் : மன கஷ்டம் வரும்
- தவளை : நோய் வரும்
- கரையான் : பணம் கரையும்
- கருங்குளவி : தீயவை நடக்கப் போகிறது
- குரங்கு : எதிரிகள் பக்கத்தில் உள்ளனர்
- மூட்டை பூச்சி : தரித்திரம் உண்டாக்கும்
- தேரை : சண்டை சச்சரவு உண்டாக்கும்
- ஆமை, உடும்பு : தீராத கஷ்டம் வரும்
- தேள், பூரான் : தீய சக்திகள் வீட்டில் உள்ளன
- தேனீ : எதிர்மறை சக்தியை கொண்டு வரும்
- சிவப்பு எறும்பு வரிசையாக வந்தால் : தேவையில்லாத பிரச்சனைகள் வரும்
- கருப்பு பட்டாம்பூச்சி : ஆபத்து வரப்போகிறது என்று முன்னோர்கள் உணர்த்துவது
- கருப்பு பூனை : வீட்டில் உள்ளவர்களுக்கு பிரச்சனை வரும் (வளர்ப்பு பூனைக்கு இது விதிவிலக்கு)
- காகம் கொத்துவது தலையில் தட்டுவது எச்சம் இடுவது வரப்போகும் ஆபத்தை முன்கூட்டியே உணர்த்துவதற்காக
இவ்வாறு நடக்கும் நேரங்களில் சற்று சிந்தித்து அமைதியாக செயல்படுங்கள்