அபிஷேகம் என்பது இயங்கும் இறை சக்தியை குளிர்விக்க கோவில்களிலும் வீட்டிலும் உள்ள சிலைகளுக்கு செய்யப்படும் ஒரு சடங்கு.
திருமுழுக்கு என்று தீந்தமிழில் கூறப்படும் அபிஷேகத்துக்கு ஆரம்பத்தில் நம் முன்னோர் 26 வகை திரவியங்களைப் பயன்படுத்தினார்கள் தற்போது அது 18-ஆக குறைந்துவிட்டது.
எந்த வகை அபிஷேகமும் 24 நிமிடங்கள் மட்டுமே செய்யவேண்டும் என்று ஆகம விதி உள்ளது.
ஆனால், சில ஆலயங்களில் 48 நிமிடங்கள் வரை அபிஷேகங்கள் செய்யப்படுவது உண்டு.
எளிமையாக சாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்யும் முறை:
- உங்கள் வீட்டில் இருக்கும் சிலைகளைப் பொறுத்து அதற்கு உகந்த நாட்களில் மாதம் ஒரு முறையாவது அபிஷேகம் செய்யுங்கள்.
- கருங்கல் திருமேனியாக இருந்தால் நல்லெண்ணெய் சாற்றி ஐந்து நிமிடம் கழித்து பிறகு அபிஷேகத்தை தொடரவும்.
- ஒவ்வொரு அபிஷேகம் முடிந்ததும் சந்தனம் குங்குமம் இட்டு ஒரு பூ வைத்து நெய்வேத்தியம் எளிமையாக உலர் திராட்சை கற்கண்டு வைத்து தீப தூபம் காட்டி பிறகு தண்ணீர் ஊற்றி களையவும்.
- மறுமுறை பின் ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் இதனை தொடரவும் குறைந்தது 6 அல்லது 16 பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.
முக்கியமான 6 அபிஷேக பொருட்கள்:
- தண்ணீர் : மன அமைதி தரும்
- பஞ்சகவ்வியம் : பாவத்தை போக்கும்
- அரிசி மாவு : அபயம் அளிக்கும்
- மஞ்சள் :கடன் நிவர்த்தி
- பால் : நீண்ட ஆயுள்
- தயிர் : மகப்பேறு தரும்
கடைசியாக வஸ்திரம் பூ சாற்றி தீப தூப ஆராதனை செய்யவும்.
ஏனெனில் விக்கிரகங்களை காய விடக்கூடாது.
இவற்றை கோவில்களுக்கு அபிஷேகத்திற்கும் கொடுக்கலாம் அதே பலன் தரும்.