பிரதோஷமும் விரத வழிபாடு முறையும் அதன் பலன்களும்

பிரதோஷம் என்ற சொல்லுக்கு “தோஷம் நீங்கும் நேரம்” என்று பொருள், பாவம் தோஷத்தை தொலைத்துக் கொள்ளும் ஒரு வகை வழிபாடு பிரதோஷம் ஆகும்.

தொடர்ந்து எத்தனை பிரதோஷ வழிபாடு செய்தால் என்ன பலன்

பிரதோஷ நேரம் :

பிரதோஷம் என்பது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதி (13-ம் நாள்) மாலை 4:30 முதல் 6:00 மணி வரை உள்ள நேரம்.

இந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்தின் பலன்கள் :

இந்த கிழமைகளில் வரும் பிரதோஷங்களில் விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களுக்கு கிடைக்கும் பலன்கள்.

  • ஞாயிறு : தம்பதி ஒற்றுமை அதிகரிக்கும்
  • திங்கள் : மனநிம்மதி கிடைக்கும்
  • செவ்வாய் : கடன், பித்ரு தோஷம் விலகும்
  • புதன் : கல்வி கலைகள் சிறக்கும்
  • வியாழன் : கிரக தோஷங்கள் குறையும்
  • வெள்ளி : சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும்
  • சனி : பஞ்சமா பாவங்கள் நீங்கும்

பிரதோஷத்தின் சிறப்புகள் :

  • பிரதோஷ காலத்தில் சிவபெருமான் ஆலகால விஷத்தைக் குடித்து உலகத்தை காத்தருளினார்.
  • பிரதோஷ காலத்தில் விரதமிருந்து சிவனை வழிபடுவதால் வறுமை, பயம், பாவங்கள் அகலும்.
  • பிரதோஷ காலத்தில் விரதம் இருப்பது நோய்கள் மற்றும் கடன் தொல்லைகளில் இருந்து விடுபட உதவும்.
  • சனி பிரதோஷத்தில் விரதம் இருந்து வழிபடுவது சனி தோஷத்தையும் போக்கும். 
  • பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுவதாக ஐதீகம்.
  • பிரதோஷ நேரத்தில் ‘நமசிவாய’ மந்திரம் ஜெபிப்பது முன்னோர்களின் பஞ்சமா பாதகங்களை நீக்கும்.
  • நந்தியின் கொம்புகளுக்கு இடையே சிவன் நடனம் புரிவதாக ஐதீகம், எனவே நந்தியை வழிபடுவது சிறப்பு.
  • நம்மால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு தானம் செய்யலாம் மிக மிக சிறப்பு.

வீட்டில் பிரதோஷம் வழிபாடு செய்யும் முறை :

பிறருக்கு ஏற்படும் கஷ்டம் தோஷம் நீக்க சிவபெருமான் அருள் பாலிக்கும் காலம் பிரதோஷம்.

  • காலை எழுந்து நீராடி விட்டு சிவபெருமான் படத்திற்கு பூக்கள் சாற்றி வழிபடவும்.
  • முடிந்தவர்கள் முழு விரதம் அல்லது பால் பழம் விரதம் இருக்கலாம்.
  • சிவபுராணம் தேவாரம் திருவாசகம் கேட்கலாம் படிக்கலாம்.
  • மாலை 04:30 முதல் 06:00 மணி வரை பிரதோஷ நேரம்.
  • லிங்கம் இருந்தால் பால் தேன் தயிர் சந்தனம் திருநீறு அபிஷேகம் செய்யலாம்.
  • சிவபெருமான் படம் வைத்திருப்பவர்கள் வில்வ இலை சாற்றி வழிபடலாம்.
  • நெய்வேத்தியம் : அவல் சர்க்கரை, பால், 2 வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, தயிர் சாதம், பொங்கல் இதில் முடிந்தவற்றை வைக்கலாம்.
  • ஒரு நெய் தீபம் ஏற்றி, தீப தூப ஆராதனைகுப் பிறகு 6.15 மணிக்கு மேல் விரதம் இருப்பவர்கள் நெய்வேத்தியம் சாப்பிட்டு விரதத்தை முடிக்கவும்.
  • விரதம் இல்லாதவர்களும் இதே போல் வீட்டில் வழிபாடு செய்யலாம் முழு சிவ அருள் கிட்டும்.
  • வேலைக்குச் செல்பவர்கள் மாலை 4.30 முதல் 6 மணி வரை ஓம் சிவாய நமக என்ற நாமத்தை மனதார சொன்னால் போதும்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *