சுக்லாம் பரதரம் மந்திரத்தின் அர்த்தம்

சுக்லாம் பரதரம் மந்திரம், விஷ்ணு பகவானுக்குரிய தியான ஸ்லோகம் எந்த ஒரு சுபகாரியத்தை ஆரம்பிக்கும் போதும் தடைகள் நீங்க வேண்டி முழுமுதற் கடவுளான விநாயகரை நினைத்து சொல்லப்படுகிறது.

மந்திரம்:

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் !

ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே !!”

பொருள்:

வெண்மையான ஆடையை அணிந்தவரும், எங்கும் நிறைந்தவரும், சந்திரனைப் போன்ற (பிரகாசமான) நிறத்தைக் கொண்டவரும், நான்கு கைகளைக் கொண்டவரும், மகிழ்ச்சியான முகத்தைக் கொண்டவருமான (விநாயகரை) நான் எல்லாத் தடைகளையும் நீக்குவதற்காகவும் சகல வினைகளும் விலகுவதற்காகவும் தியானிக்கிறேன்.

விளக்கம்:

  • சுக்லாம் பரதரம் : வெண்மையான ஆடையை அணிந்தவரும்
  • விஷ்ணும் : எங்கும் நிறைந்தவரும்
  • சசிவர்ணம் : சந்திரனைப் போன்ற (பிரகாசமான) நிறத்தைக் கொண்டவரும்
  • சதுர்புஜம் : நான்கு கைகளைக் கொண்டவரும்
  • ப்ரஸந்ந வதநம் த்யாயேத் : மகிழ்ச்சியான முகத்தைக் கொண்டவருமான (விநாயகரை)
  • ஸர்வ விக்நோப சாந்தயே : நான் எல்லாத் தடைகளையும் நீக்குவதற்காகவும் சகல வினைகளும் விலகுவதற்காகவும் தியானிக்கிறேன்

விநாயகரின் 16 முக்கிய மந்திரங்கள்

இந்த மந்திரங்களை நாம் தினமும் விநாயகரை நினைத்து மனதார உச்சரிப்பதால் 16 வகை செல்வங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *