அமாவாசை அன்று முன்னோர்கள் வழிபாட்டில் செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாதது

தர்ப்பணம் செய்வதற்கும் முன்னோர்கள் வழிபாட்டிற்கும் உகந்த நாள் அமாவாசை.

நாம் தர்ப்பணம் கொடுப்பதால் நம் முன்னோர்களுக்கு மோட்சம் கிடைக்கும்.

வீட்டில் தர்ப்பணம் கொடுக்கும் முறை

அமாவாசை அன்று முன்னோர்கள் வழிபாட்டில் செய்யக்கூடாதது:

  • வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. நகம் வெட்டுதல் மூடி வெட்டுதல் செய்யக்கூடாது.
  • அசைவம் சமைக்கக்கூடாது சாப்பிடக்கூடாது.
  • முன்னோர்கள் பூஜையில் மணி அடிக்க கூடாது.
  • எள் கடனாக வாங்கி தர்ப்பணம் செய்யக்கூடாது.
  • வீடு பூஜை அறை அமாவாசை அன்று சுத்தம் செய்யக்கூடாது.
  • தர்ப்பணத்திற்கு ராகு காலம் எமகண்டம் பார்க்க தேவையில்லை.
  • படையல் போடும்போது ராகு காலம் எமகண்டமாக இருக்கக் கூடாது.
  • நிலை வாசலுக்கு மஞ்சள் குங்குமம் இடக்கூடாது.
  • எலுமிச்சை அறுத்து நிலை வாசலில் வைத்திருந்தால் எடுத்து விட வேண்டும்.
  • பூஜை அறையில் உள்ள விளக்கை முன்னோர் வழிபாட்டிற்கு ஏற்றக்கூடாது.
  • முன்னோர்கள் வழிபாடும் முடியும் வரை பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய கூடாது.
  • சுமங்கலி பெண்கள் தர்ப்பணம் கொடுக்கக் கூடாது.
  • தந்தை உள்ள மகன்கள் தர்ப்பணம் கொடுக்கக் கூடாது.
  • பெண் பிள்ளைகள் பெற்றோருக்காக எள் தண்ணீர் இறைத்து பிண்டம் வைக்கக்கூடாது.
யார் தர்ப்பணம் கொடுக்கக் கூடாது?

அமாவாசை அன்று முன்னோர்கள் வழிபாட்டில் செய்ய வேண்டியது:

  • குலதெய்வ வழிபாடு அவசியம், தானம் செய்ய வேண்டும்.
  • மாலையில் ஆலயத்திற்கு சென்று ஆறு மணிக்கு மேல் ஒரு நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.
  • முன்னோர்கள் படம் இல்லாதவர்கள் தெற்கு பார்த்து ஒரு அகல் விளக்கு மட்டும் ஏற்றி வழிபடலாம்.
  • சுமங்கலி பெண்கள் ஏதேனும் சாப்பிட்டுவிட்டு தான் படையலுக்கு சமைக்க வேண்டும்.
  • வாழைக்காய் கண்டிப்பாக சமைக்க வேண்டும்.
  • படையலில் உளுந்து வடை, சர்க்கரை பொங்கல் வைக்க வேண்டும்.
  • காகத்திற்கு கிழக்கு பார்த்தவாறு உணவு வைக்க வேண்டும்.
  • காகத்திற்கு சாதம் வைத்து எடுத்த பிறகுதான் நாம் சாப்பிட வேண்டும்.
  • பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வாழைப்பழம் தானமாக கொடுக்க வேண்டும்.
  • தெரு நாய்களுக்கு உணவு அளிக்க வேண்டும்.
  • வயதானவர்கள் விரதம் இருக்க தேவையில்லை தானம் செய்து படையில் போட்டு வழிபட்டால் போதும்.
  • பெண்களுக்கு மாதவிடாய் காலமாக இருந்தால் குளித்துவிட்டு படையலுக்கு சமைக்கலாம்.
  • அமாவாசை அன்று இரவு ஒரு கைப்பிடி சாதம் ஆவது நாம் சாப்பிட வேண்டும்.

யார் தர்ப்பணம் கொடுக்கலாம்?

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *