ஹோமங்களில் பலவித சமித்துக்களை அக்னியில் போடுகிறோம் அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு.
சமித்து என்பது ஹோமகுண்டத்தில் சேர்க்கப்படும் பல்வேறு வகையான குச்சிகள் இலைகள் போன்றவை ஆகும்.
கடவுளுக்கு பிடித்தமான சமித்துகள் :
- வில்வம் : சிவன்
- துளசி : விஷ்ணு
- தாமரை பூ : மகாலட்சுமி
- அத்திமரசமித்து : சுக்கிரன்
- நாயுருவிசமித்து : புதன்
- பலாமரசமித்து : சந்திரன்
- அரசமரசமித்து : குரு
- அருகம்புல் : ராகு
- தர்ப்பை : கேது
- வெள்ளை எருக்கு : சூரியன்
- வன்னிமரசமித்து : சனீஸ்வரன்
- செம்மரசமித்து : அங்காரகன்
ஹோமத்தில் போடப்படும் சில சமித்துக்களும் அதன் பலன்களும் :
- துளசி : திருமணம் கைகூடும்
- அத்திக்குச்சி : மகப்பேறு அருளும்
- நாயுருவிகுச்சி : மகாலட்சுமி கடாட்சம்
- எருக்கன்குச்சி : எதிரிகள் இல்லாத நிலை உண்டாகும்
- அரசங்குச்சி : அரசு வேலை அரச பதவி கிடைக்கும்
- கருங்காலிகுச்சி : ஏவல் பில்லி சூனியம் அகலும்
- வன்னிக்குச்சி : சனிகிரக கோளாறுகள் நீங்கும்
- புரசங்குச்சி : குழந்தைகளின் கல்வி வளர்ச்சி
- அருகம்புல் : விஷபயம் நீங்கும்
- ஆலங்குச்சி : புகழைச் சேர்க்கும்
- நொச்சி : காரியத்தடை விலகும்
- வில்வம் : ராஜ யோகம் கிட்டும்
- தர்ப்பை : ஞானம் பெருகும்
- சோமவல்லிகொடி : தீராத நோய்கள் நீங்கும்
- மாமரகுச்சி : சர்வமங்களங்களையும் தரும்
- மாதுளைகுச்சி : வசீகரம் உண்டாகும்
- கரும்புச்சாறு : விரும்பிய வரன் அமையும்
- நவதானியங்கள் : கிரக தோஷங்கள் விலகும்
- புங்கங்குச்சி : வெற்றியைத் தரும்
- இலந்தை : குடும்பம் இனிது வாழ வழி உண்டாகும்
- தேவதாரு : சகல தெய்வங்களின் அருள் கிடைக்கும்
- வல்லாரைக் கொடி : கல்வி சிறப்பாக வரும்
- எள் : தீராத கடன் தொல்லை தீரும்
- ஆலங்குச்சி : ஆயுள் நீடிக்கும்
- மகிழம்பூ : சிக்கல்கள் அனைத்தும் தீரும்
- முழு மஞ்சள் : சகல வியாதிகளை நீக்கும்
- சந்தனமரகுச்சி : சகல பீடைகளும் விலகும்
- செம்மரகுச்சி : ரண ரோகங்கள் நீங்கும்
- பலாமரகுச்சி : சந்தர தோஷம் நீங்கும்
- பூவரசு : மன அமைதி உண்டாகும்
நவகிரகங்களுக்குரிய சமித்து குச்சிகள் மற்றும் விரிவான பலன்கள் :
பலாமர சமித்து :
- பலாமர சமித்து என்பது சந்திரனுக்குப் பிடித்தமானது.
- ப்ரம்ம ஞானம் அடையலாம்.
- எல்லா இஷ்ட காரியங்களும் வெற்றியாகும்.
- ஞானமும் சிறந்த புத்தியும் பெறலாம்.
- சந்திர தோஷம் உள்ளவர்கள் பலாமர சமித்தை ஹோமத்தில் சேர்ப்பதன் மூலம் சந்தர தோஷம் நீங்கும்.
அரசமர சமித்து :
- அரசு சமித்து என்பது அரச மரத்தின் குச்சிகளைக் குறிக்கிறது.
- இது குரு கிரகத்திற்கு பிடித்தமான சமித்தாகும்.
- பதவி உயர்வு, தலைமைப் பதவி வரும்.
- அரசியல் வெற்றி அரசு வேலை கிடைக்கும்.
- ஸ்திரீ வசிய சக்திகளை அருளும்.
- எதிரிகளை வெல்வதற்கு உதவும்.
வெள்ளை எருக்கு சமித்து :
- சூரிய கிரகத்திற்கு பிடித்தமான சமித்தாகும்.
- இந்த மூலிகை சர்வசக்தி பொருந்தியது.
- எடுத்த வேலை நன்றாக முடியும்.
- சர்வ வசியங்களையும் அடையலாம். (ராஜ வசியம், ஸ்திரீ வசியம், மிருக வசியம், சர்ப்ப வசியம், லோக வசியம், சத்ரு வசியம், தேவ வசியம்)
செம்மர சமித்து :
- அங்காரக கிரகத்திற்கு பிடித்தமான சமித்தாகும்.
- ரண ரோகங்கள் நீங்கும்.
- தைரியம் தன்னம்பிக்கை பெருகும்.
நாயுருவி சமித்து :
- இது புதன் கிரக சமித்தாகும்.
- லட்சுமி கடாட்சம் ஏற்படும்.
- சுதர்சன ஹோமத்திற்கு இதுவே சிறந்தது.
அத்திமர சமித்து :
- சுக்கிர கிரகத்தின் சமித்தாகும்.
- புத்திர பேரு உண்டாகும்.
- பித்ரு ப்ரீதி பெற்று விரும்பியது கைகூடும்.
- வாக்கு சித்தியும் உண்டாகும்.
- பில்லி சூனியம் பிசாசு பயம் நீக்கும்.
- பகைவர்கள் எதிரிகளை வெல்லலாம்.
- பைத்தியமும் ரோகங்களும் அகலும்.
- பசு யானை குதிரை நோய் நீங்கும்.
வன்னிமர சமித்து :
- வன்னி சமித்து சனிக் கிரகத்தின் சமித்தாகும்.
- சனி தோஷம் நிவர்த்தியாகும்.
- அக்னிப் பகவான் இதில் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.
- வன்னி சமித்து பஸ்பம் (சாம்பல்) மும்மூர்த்திகளையும் மூன்று உலகங்களையும் மூன்று அக்னிகளையும் மூன்று குணங்களையும் குறிக்கும்.
- வன்னிமரசமித்து யாக பஸ்பத்தை நெற்றியில் வைத்துக் கொள்வது யம பயத்தை போக்கும்.
- சகல தெய்வங்களும் தேவர்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
- பூகம்பங்களால் உண்டாகிற பயங்கள் நீங்கும்.
தர்ப்பை சமித்து :
- கேது பகவானுக்கு தர்ப்பை சமித்து மிகவும் பிடித்தமானது.
- இது ஞான விருத்தியைத் தரும்.
அருகம்புல் :
- ராகு பகவானுக்கு அருகம்புல் சமித்து மிகவும் பிடித்தமானது.
- பூர்வ ஜென்ம வினைகள் நீங்கும்.
- விஷ பயம் நீங்கும்.
- சர்வ இடையூறுகள் நீங்கும்.
- காரியம் சித்தியடையும்.
- கீர்த்தியும் புகழும் பெறலாம்.
- அறிவும் அழகும் வசீகரமும் உண்டாகும்.
- விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிடித்தது.
- கணபதி ஹோமத்தில் இதைப் பயன்படுத்துவர்.
யாகத்தில் போடப்படும் சில பொருட்களின் பயன்கள் :
எள் :
- தீராத கடன் தொல்லை தீரும்.
- பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும்.
மகிழம்பூ :
- சிக்கல்கள் அனைத்தும் தீரும்.
- சகல துக்கங்களும் சரியாகும்.
- மனம் அமைதி பெறும்.
முழு மஞ்சள் :
- சகல வியாதிகளை நீக்கும்.
- கல்வியும் செல்வமும் தரும்.
- ஸ்ரீ வித்யா ஹோமத்துக்குச் சிறந்தது.
ஆலமர சமித்து :
- ஆயுள் நீடிக்கும்.
- நோய்கள் நீங்கும்.
- யமனுக்குப் பிடித்தமானது.
- ம்ருத்யஞ்சய வேள்வியில் முக்கியமானது.
சந்தனமரம் :
- சகல பீடைகளும் விலகும்.
- லட்சுமி கடாட்சம் ஏற்படும்.
- சகல சம்பத்துடன் வாழ்வார்கள்.
பூவரசு :
- பூலோக அரச மரம் என்று வழங்கப்படுகிறது.
- மன நிம்மதி அமைதி உண்டாகும்.
- அரசு சமித்திற்கு இணையான பலன் இதற்கும் உண்டு.