கால பைரவர் அவதரித்த நாள் கால பைரவாஷ்டமி இந்நாளில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்வது மிகவும் விசேஷமானது.
காலபைரவரை வழிபடும் முறை:
- தேய்பிறை அஷ்டமி தினத்தில் அதிகாலை நீராடி பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும்.
- அஷ்டமி நாளில் விரதம் இருப்பது பைரவர் வழிபாட்டில் முக்கியமானது.
- பைரவருக்கு வடை மாலை சாற்றி வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அர்ச்சனை செய்வது சிறப்பு.
- பைரவர் சன்னதியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
- சொர்ணாகர்ஷண பைரவரை வணங்குவது இன்னும் சிறப்பான பலன்களைத் தரும்.
கால பைரவாஷ்டமி நாளில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் கிடைக்கும் பலன்கள் :
- செல்வங்கள் பெருகும்
- கடன் தொல்லைகள் நீங்கும்
- பயம் நீங்கி தைரியம் உண்டாகும்
- வழக்குகளில் வெற்றி கிடைக்கும்
- சகல சௌபாக்கியங்களும் பெருகும்
- எல்லா விதமான கஷ்டங்களும் நீங்கும்
கால பைரவரை வழிபட உகந்த நாட்கள் :
- சனி பிரதோஷ நாட்கள்
- ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரம்
- தேய்பிறை அஷ்டமியில் விரதம் இருப்பது வழிபடுவது சிறப்பு
12 ராசிக்காரர்களும் பைரவரை பார்த்து வணங்க வேண்டிய பகுதி :
- மேஷம் : தலைமேல் அக்னி பிழம்பு
- ரிஷபம் : முகம்
- மிதுனம் : கழுத்து
- கடகம் : மார்பு
- சிம்மம் : இரண்டு கால்களுக்கு மேல்
- கன்னி : வயிறு
- துலாம் : ஆண்குறி
- விருச்சிகம் : தொடை
- தனுசு : முட்டி
- மகரம் : முட்டையின் கீழ்
- கும்பம் : இருபாதம்
- மீனம் : பாதவிரல்